RATHA KANNEER (1954)-Vaalavayathagi azhagagi mathanagi- C.S.Jayaraman |
![]() |
1954ஆம் ஆண்டு M. R. ராதாவின் உன்னத நடிப்பில் உருவான 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தில் இடம் பெற்ற அருணாகிரிநாத ஸ்வாமி இயற்றிய ராமேஸ்வரம் திருப்புகழின் ஒரு பகுதி 'வாலவயதாகி அழகாகி மதனாகி'. இசையமைத்துப் பாடியவர் இசைச் சித்தர் C. S. ஜெயராமன். தோற்றம் நடிகவேள் M.R. ராதா.
திருப்புகழ்: வாலவய தாகியழ காகிமத னாகிபணி வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல் வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ் வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற் சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ |